டில்லி

ந்திய  வானிலை  ஆய்வு மையம் வங்கக் கடலில் புதிய காற்றழுத்தப்பகுதி உருவாகி உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 17 ஆம் தேதி முதல் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையால், தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  இந்த கனமழை  குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் மிகக் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுப்பெற்று மேற்கு வங்கம், ஒடிசா கடற்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக  இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அடுத்த 3 நாட்களுக்குள் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா – தெற்கு ஜார்கண்ட் நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் இதனால் குஜராத், ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.