டில்லி,
தாயம் தரும் பதவி வகிப்பதாக டில்லி ஆம்ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் 27 பேருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதன் காரணமாக  ஆம்ஆத்மிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
ec-ibnlive
ஆதாயம் தரும் பதவி வகிப்பதால் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் 27 பேரையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என கோரி புதிய மனு ஒன்று, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த ஜுன் மாதம்  ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் 27 பேர் ஆதாயம் தரும் பதவிகளை வகிப்பதாக  ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு கடந்த மாதம் ஜனாதிபதி மாளிகை மூலம் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதே போன்று, மற்றொரு மனு தேர்தல் கமிஷனுக்கும் அனுப்பப்பட்டது. இந்த மனு மீது  நவம்பர் 11ந் தேதிக்குள் பதிலளிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

இந்த எம்.எல்.ஏ.,க்கள் பட்டியலில் டில்லி சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல், துணை சபாநாயகர் ராக்கி பிர்லா, முன்னாள் சபாநாயகர் பந்தனா குமாரி உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
ஏற்கனவே டெல்லி ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பலர் பாலியல் வழக்கு போன்றவற்றால் பதவி விலக்கப்பட்டும், கைது செய்யப்பட்டும் வந்துள்ள நிலையில், தற்போது 27 எம்எல்ஏக்களின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று முதல்வர் கெஜ்ரிவால் அஞ்சுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது.