சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பிக்கலாம்  என சட்டப்பேரவையில் துணைமுதல்வர்  உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அத்துடன் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர் கள் பதில் அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விளையாட்டுத்துறை தொடர்பான மானிய கோரிக்கை குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  பேரவையில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும்,   காலை உணவு திட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களின் பங்களிப்பு உள்ளது. இந்த ஆண்டு சுயஉதவி குழுவினருக்கு ரூ.37,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

சென்னை புறநகரில் மட்டும் 1.36 லட்சம் குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டு வருகிறது.

வாழ்ந்து காட்டுவோம் திட்டம் 3.O விரைவில் தொடங்கப்பட்டு விடுபட்ட ஒன்றியங்களும் சேர்க்கப்படும்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூ.21 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.  கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பிக்க விரைவில் வாய்ப்பு வழங்கப்படும்.  மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பிக்கலாம்

விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது என்றார்