ஊரடங்கு குறித்த நெட்டிசன் ராமானுஜன் கோவிந்தன் முகநூல் பதிவு

Lock down Or Herd immunity?
இது ஒரு பெரிய விவாதத்திற்குரிய விஷயம்.
கூட்டு எதிர்ப்பு எனப்படும் Herd immunity வருவதற்குத் தளர்வுகள் தேவை. ஆனால் நோய் பரவும் வேகத்தைக் குறைக்க லாக்டவுண் தேவை. இரண்டுமே தேவை.
இந்தியாவில் மே 30 ஆம் தேதி 1.8 லட்சம் கேஸ்கள். ஐந்தாயிரம் மரணங்கள்.
அமெரிக்காவில் மார்ச் 31 ஆம் தேதி 1.8 லட்சம் கேஸ்கள் . ஐந்தாயிரம் மரணம்.
இந்தியாவும் அமெரிக்காவின் பாதையில் ஆனால் மெதுவாகச் செல்கிறது – லாக்டவுன், வெப்பம் போன்றவை காரணங்களாக இருக்கலாம்.
இன்னும் இரண்டு வாரங்களுக்குக் கடும் கட்டுப்பாடுகளுடன் , அதாவது முதல் லாக்டவுண் போல் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் அமுல் செய்ய வேண்டும்.
மற்ற மாவட்டங்களில் தளர்வுகள் தொடரலாம். அங்கு எண்ணிக்கை வேகம் அதிகமானால் மீண்டும் லாக்டவுண் தேவை.
கொரோனாவைப் பொருத்தவரை அதனால் பாதிக்கப்பட்ட பலருக்குப் பெரிதாகப் பாதிப்புக்கள் இல்லை என்ற போதும் அதன் பரவும் வேகம் மிக மிக அதிகமாக இருப்பதால் ஒரே நேரத்த்தில் பலரைப் பாதிக்கிறது.
அதனால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியாது. பாதிப்படையும் வேகத்தைக் குறைக்கலாம். அதைத்தான் லாக்டவுண் செய்கிறது. பலருக்கும் மெதுவாகப் பரவியபின் தோற்றின் வேகம் தானே குறையும். Herd immunity என்னும் கூட்டு எதிர்ப்பு உருவாக வேண்டும்.
அதுவரை தளர்வு + லாக்டவுண் என்னும் கண்ணாமூச்சிதான் ஆட வேண்டும்.