Skip to content

today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்

தமிழ் செய்தி இணையதளம்

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
  • Youtube
தமிழ் நாடு

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாளை ‘நீட்’ தேர்வு.. கடும் கட்டுப்பாடுகள்…

Sep 12, 2020

சென்னை: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மருத்துவப் படிப்பு நுழைவுத்தேர்வான நீட் தேர்வு நாளை நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

இந்த தேர்வை சுமார்  16 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளதாகவும், இதற்காக  3 ஆயிரத்து 842 மையங்கங்கள் எற்படுத்தப்பட்டு இருப்பதுடன், தேர்வு எழுதுபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடு களையும் தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.

நீட் தேர்வு நாடு முழுவதும்  நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் 3 ஆயிரத்து 842 மையங்களில் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் எழுத உள்ளனர்.

தமிழ்நாட்டில் 238 தேர்வு மையங்கள் தேர்வுக்காக தயார்நிலையில் உள்ளது. 1லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் எழுத பதிவு செய்து உள்ளனர்.

தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், தற்போது சில தேர்வு மையங்களை மாற்றி இருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. . இதுகுறித்த அறிவிப்பு அந்தந்த தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்பட்டுவிட்டதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்று இருக்கும் காரணத்தினால் தேர்வர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன.

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால்டிக்கெட், மருத்துவச் சான்று அடையாள அட்டை, சானிடைசர் ஆகியவை வைத்திருக்க வேண்டும்.
தேர்வு எழுதும் மாணவர்கள் நாளை காலை 11 மணிக்குள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும்

மாணாக்கர்கள் தேர்வு அறைகளுக்கு செல்வதற்கு முன்பு அவர்களின் உடல் வெப்பநிலை சரிபார்க்கப்படும்.

99.4 டிகிரிக்கு மேல் தேர்வர்களின் உடல்வெப்ப நிலை இருக்கும் பட்சத்தில், 20 நிமிடம் தனியாக அமரவைக்கப்படுவார்கள். அதன்பிறகும் உடல் வெப்பநிலை குறையாத பட்சத்தில் தனிஅறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

தேர்வர்கள் கையில் 50 மில்லி அளவுகொண்ட கிருமிநாசினி திரவம், வெளிப்படையான வாட்டர் பாட்டில், கையுறைகள், தேர்வுக்கு தேவையான ஆவணங்கள் எடுத்துச்செல்லலாம்.

தேர்வு அறையில் தேசிய தேர்வு முகமை சார்பில் முககவசம் வழங்கப்படும். அந்த முககவசத்தை தான் தேர்வர்கள் அணிந்து தேர்வு அறைக்குள் செல்லவேண்டும்.

தேர்வு முடிந்ததும், ஹால் டிக்கெட்டில் கேட்டு இருக்கும் விவரங்களை சரியாக பூர்த்திசெய்து, தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.

மாணவர்கள் தேர்வு மைய வளாகத்தில் தேர்வர்கள் சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு தேசிய முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Patrikai.com official YouTube Channel
YouTube Video VVVXVTV4RTg2Vm5pVjhlWjZtS2NlLVR3LlFOSWk4M3hUNHd3 அரசியலில் டோக்கன் கொடுக்கதான் அவர் லாயக்கு - ஆவடி குமார் 

#edapadipalaniswamy #opaneerselvam #ops #admk #tamilpolitics #tnpolitics #tnelection2026 #assemblyelection2026 #bussyanandh #tvkvijay #vijay #sengottaiyan #kas #ttv #sasikala #ttvdinakaran #gobichettipalayam #patrikaidotcom #avadikumar
அரசியலில் டோக்கன் கொடுக்கதான் அவர் லாயக்கு - ஆவடி குமார் 

#edapadipalaniswamy #opaneerselvam #ops #admk #tamilpolitics #tnpolitics #tnelection2026 #assemblyelection2026 #bussyanandh #tvkvijay #vijay #sengottaiyan #kas #ttv #sasikala #ttvdinakaran #gobichettipalayam #patrikaidotcom #avadikumar
அரசியலில் டோக்கன் கொடுக்கதான் அவர் லாயக்கு - ஆவடி குமார் #admk #edapadipalaniswamy
கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்துக்கு  பிரச்சனையே இதுதான்- Dr. காந்தராஜ்

#rajinikanth #kamalhaasan #Mahendran #rkfi #kantharaj #drkantharaj #directorshankar #pvasu #avmsaravanan #kollywood #tamilcinenews #tamilcinema #superstarrajinikanth
கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்துக்கு பிரச்சனையே இதுதான் Dr.காந்தராஜ் #thalaivar173
வள்ளியை கவர்ந்து தன் நிலைக்கு கொண்டு வந்த முருகா..
வள்ளியை கவர்ந்து தன் நிலைக்கு கொண்டு வந்த முருகா..#thiruppugazh
Load More... Subscribe

Post navigation

நீட் பயங்கரத்தால் மேலும் ஒரு சோகம்: மதுரையில் மாணவி தற்கொலை
தெலுங்கானா உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரசாரிடையே மோதல்…

Related Post

தமிழ் நாடு

கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்து வாடும் நான்கு குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்…

தமிழ் நாடு

தேசிய நீர் விருதுகளை முதல்வர் ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர் மாவட்ட ஆட்சியர்கள்!

தமிழ் நாடு

ஓபிஎஸ் உடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு… அரசியல் பரபரப்பு…

உலகம்

இந்தியா உலகம்

இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்!

December 4, 2025 A.T.S Pandian
உலகம்

19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் விசா விண்ணப்பங்கள் தற்காலிக நிறுத்தம்… அமெரிக்கா அறிவிப்பு

December 3, 2025 Sundar
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உலகம்

புவி காந்த புயல் : இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட சக்திவாய்ந்த சூரிய வெடிப்பு காரணமாக நாசா எச்சரிக்கை

December 3, 2025 Sundar
உலகம்

2 வாரத்தில் 1000 பேர் வரை பலி… தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மழையின் கோரத்தாண்டவம்…

December 1, 2025 Sundar
உலகம்

சிறுவர்களின் ஆபாச வீடியோ தொடர்பாக சிட்னியைச் சேர்ந்த 4 பேரை ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்துள்ளனர்.

December 1, 2025 Sundar

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer