சரத் பவார் பிரிவுக்கு தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார்) என்ற பெயரும் ‘துர்ரா ஊதும் மனிதன்’ சின்னமும் ஒதுக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

லோக்சபா மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில் சரத்பவார் அணிக்கு, ‘தேசியவாத காங்கிரஸ் கட்சி – சரத் சந்திர பவார்’ என்ற பெயரையும், ‘துர்ரா ஊதும் மனிதன்’ சின்னத்தையும் பயன்படுத்த உச்ச நீதிமன்ற அனுமதி அளித்துள்ளது.

மேலும், ‘துர்ரா ஊதும் மனிதன்’ சின்னத்தை சரத்பவார் தலைமையிலான கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்றும் வேறு எந்த கட்சி அல்லது வேட்பாளருக்கு ஒதுக்கக்கூடாது என்றும் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

‘கடிகாரம்’ சின்னத்தைப் பயன்படுத்துவது நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று அக்கட்சி வெளியிடும் விளம்பரங்கள், ஆடியோ-வீடியோ காட்சிகள் உள்ளிட்டவற்றில் குறிப்பிடவேண்டும் என்று அஜித் பவார் தலைமையிலான என்சிபி பிரிவு-க்கு உத்தரவிட்டுள்ளது.