மும்பை தொடர் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிமின் சொத்துக்களை பிரிட்டன் அரசு முடக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், துப்பாக்கிச் சூடு, குண்டு வெடிப்பு, போதைப்பொருள் கடத்தல், ஆயுத விற்பனை போன்ற தொழில்களை  உலகம் முழுவதும் கிளை பரப்பி செய்து வருபவர் நிகழல் உலக தாதா தாதா தாவூத் இப்ராஹிம்.

மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புக்கு காரணமான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறது.

இந்நிலையில்,தாதா தாவூத் இப்ராகிமிக்கு சொந்தமான பிரிட்டனில் உள்ள சொத்துக்களை முடக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

தேடப்படும் குற்றவாளியான தாவூத் சொத்துக்களை முடக்க கோரி மத்திய அரசு, மற்ற நாடுகளுக்கு  தூதரகம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், குற்றவாளியான  தாவூத் இப்ராகிமுக்கு லண்டன் வார்விக் ஷயர் பகுதியில் நட்சத்திர விடுதி உள்பட பல்வேறு சொத்துக்கள், விடுதிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சொத்துக்களை முடக்கியிருப்பதாக பிரிட்டன் அரசு தெரிவித்து உள்ளது.