புதுடெல்லி:
டெல்லி, காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன் ராகுல் காந்திக்கு ஆதரவாக திரண்ட கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று அமலாக்கத்துறை முன்பு ஆஜராகிறார்.

இந்நிலையில் ராகுல்காந்தியிடம் மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி இன்று நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தது.

டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு இன்று காலை காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்து, அனைத்து காங்கிரஸ் எம்பிக்களுக்கும் டெல்லி வந்தடைந்தனர்.

முன்னதாக டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து இன்று காலை 10 மணிக்கு, மத்திய அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி காங்கிரஸ் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் பேரணியாக செல்ல திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில், இந்த பேரணிக்கு டெல்லி காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.

காவல் துறை அனுமதியை மீறி டெல்லி, காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன் ராகுல் காந்திக்கு ஆதரவாக திரண்ட கட்சியினரை டெல்லி காவல்துறை கைது செய்தது.