விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெறும் 3ஆ,ம் கட்ட அகழாய்வில் 200க்கும் மேல் பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுளன

தற்போது விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் 3-ம் கட்ட அகழ்வாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை இந்த அகழாய்வில் 200க்கும் அதிகமான பழங்காலப் பொருட்கல் கண்டெடுக்கபட்டுள்ளன

குறிப்பாக இந்த அகழாய்வில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சங்கு வளையல் மற்றும் கழுத்தில் அணியும் சுடு மண்ணால் ஆன பதக்கம் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவற்றைத் தவிர கண்ணாடி மணிகள், கல்மணிகள், பழங்கால செங்கற்கள், சிகை அலங்காரத்துடன் பாவையின் தலைப்பகுதி, அலங்கரிக்கப்பட்ட சுடுமண் அகல்விளக்கு, சுடு மண்ணாலான கூம்பு வடிவ கிண்ணத்தின் அடிப்பகுதி, சதுரங்கம் விளையாடும் ஆட்டக்காய், சில்வட்டு, எலும்புகள் மற்றும் பானை ஓடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.