சென்னை
நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படம் பிரம்மாண்டமாக தொடங்கி உள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ‘மூக்குத்தி அம்மன்’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக சில மாதங்களுக்கு முன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கவுள்ளார்.
பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ள இத்திரைப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளனர். ரூ 100 கோடி பட்ஜெட்டில் இப்படம் தயாராகவுள்ளது. தற்போஒது படத்தின் செட் அமைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக தொடங்கி மார்ச் 15-ம் தேதியில் இருந்து படப்பிடிப்பு பணிகளை நடைபெர உள்ளது.
இன்று காலை 9 மணியளவில் மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கான பூஜை பிரம்மாண்டமாக நடந்தது. பூஜையில் பெரிய அளவில் அம்மன் சிலை அமைத்து வழிபாடு செய்து வருகின்றனர். ஏராளமானோர் இந்த பூஜையில் கலந்து கொண்டதால், திருவிழாபோல் அந்த இடம் காட்சியளித்தது.