சென்னை: வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ரூ.1.5 கோடி நிதி பெற்றது தொடர்பான வழக்கில், தமிழக எம்எல்ஏ ஜவாஹிருல்லாவுக்கு எழும்பூர் நீதிமன்றம் விதித்த தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து பணம் பெற்றது தொடர்பாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது.
இதை எதிர்த்து ஜவாஹிருல்லா மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு கடந்த 14 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த நிலையில், தற்போது, மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா உள்ளிட்டோருக்கு எழும்பூர் மெட்ரோபாலிடன் நீதிமன்றம் விதித்த தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாநில தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, (அப்போது, எம்.எச்.ஜவாஹிருல்லா மனிதநேய மக்கள் கட்சியின் ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்) மற்றும் 5 பேர், அவதாது, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாநில தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஹைதர் அலி மற்றும் எச்.சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகியோர், கடந்த 15.12.1997 முதல் 20.6.2000 வரை வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றதாக இவர்கள் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்து. அதன்படி, . வெளிநாடுகளில் இருந்து ரூ.1 கோடியே 54 லட்சத்து 88 ஆயிரத்து 508 வசூலித்ததாகவும், இதற்கு முறையாக மத்திய அரசிடமோ, ரிசர்வ் வங்கியிடமோ அனுமதி பெறவில்லை என்றும் மேற்கண்ட 5 பேர் மீதும் வெளிநாட்டு பணம் முதலீட்டு ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு போடப்பட்டது.
இந்த வழக்கு சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில், சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் நீதிபதி பி.மோகன்தாஸ், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால், ஜவாஹிருல்லாவுக்கும், ஹைதர் அலிக்கும் தலா ஓராண்டு சிறைத் தண்டனையும், சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் இவர்கள் அனைவருக்கும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் அபராதமும் (ஜவாஹிருல்லா, ஹைதர் அலி ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரமும், சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகியோருக்கு தலா ரூ.40 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது) விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும், தண்டனை பெற்றவர்கள் 30 நாட்களுக்குள் தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்ய கோர்ட்டில் அனுமதி வழங்கப்பட்டது. மேலும் தண்டனை பெற்றவர்கள் அனைவரும் தலா இரு நபர் ஜாமீனில் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கிடப்பில் இருந்த நிலையில், தற்போது இந்த வழக்கில், எம்.எச்.ஜவாஹிருல்லா மீதான கீழமை நீதிமன்ற தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
அதன்படி, ஜவாஹிருல்லா, ஹைதர் அலி, ஜிஎம்.ஷேக், , நல்ல முகமத் கலஞ்சிக்கு சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது.