டெல்லி
இன்றைய மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரித்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன., மகா சிவராத்திரியையொட்டி பிரதமர் மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில்,
“இந்த புனித நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். இந்த தெய்வீக நாள், உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கட்டும். அதே போல் வளர்ந்த இந்தியாவின் உறுதியை வலுப்படுத்தட்டும்.
ஹரஹர மகாதேவ்”
எனப் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,
“மகா சிவராத்திரி திருநாளில் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். சிவசக்தியின் ஆசிகள் எப்போதும் உங்கள் மீது நிலைத்திருக்கட்டும்.
ஹரஹர மகாதேவ்”
எனவாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்/.