தென் ஆப்ரிக்கா தாம்போ மாவட்டத்தில் தயிசி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வந்த 9 மாத கர்ப்பிணி டோயி சில தினங்களுக்கு முன் இறந்து விட்டார். சடங்கு, சம்பரதாயங்களுடன் முடித்து உடல் அடக்கம் செய்வதற்கு பிண கிடங்கில் வைக்கப்பட்டது.

பிணவறையில் இருந்து உடலை எடுக்கப் சென்றபோது இறந்த பெண்ணின் கால்களுக்கு இடையே சிசு ஒன்று இறந்த நிலையில் இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், ‘‘ இதுவரை இப்படியொரு சம்பவம் நடந்தது கிடையாது. இறந்த உடலில் நுண்ணுயிரிகள் செயல்பட்டதால் குழந்தை பிறந்திருக்கலாம். இல்லை இறப்புக்கு பின் தசையில் தளர்வு ஏற்பட்டதன் காரணமாக குழந்தை வெளியில் தள்ளப்பட்டிருக்கலாம். இது இயற்கை, அபூர்வ நிகழ்வாகும்’’ என்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.