சென்னை
தமிழக முதல்வர் கூட்ட்ணி கட்சிகளை மதிக்கும் தலைவர் என அமைச்சர் சேகர் பாபு புகழ்ந்துள்ளார்.
நேற்று அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம்,;-
“உள்ளமெல்லாம் மகிழ்ச்சி இல்லங்கள் தோறும் எழுச்சி. திராவிட மாடல் ஆட்சியின் மகத்தான சாதனைகளால் இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நான்காம் ஆண்டாக சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. காணும் பொங்கலில் உலகத்தை முழு சுதந்திரத்தோடு காணுகின்ற ஆட்சி அமைந்திருக்கிறது. காணும் பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.
குற்றச் சம்பவங்களை தடுப்பது ஒரு புறம், நடந்த முடிந்த பிறகு அதன் மீது நடவடிக்கை எடுப்பது மறுபுறம். இந்த ஆட்சியில் இன்னார் இனியவர் என்று பாகுபாடு கிடையாது, தவறு யார் செய்திருந்தாலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகின்ற சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது.
ஐ.ஐ.டி சம்பவம் தொடர்பாக உரிய குற்றவாளி கைது செய்து கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குற்றச்சம்பவங்கள் நடக்காமல் இருக்க காவல்துறையை முதல்வர் முடக்கிவிட்டுள்ளார். குற்ற சம்பவம் நடந்தால் அதன் மீது 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கின்ற ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது.
கூட்டணி கட்சிகளை மதிக்கின்ற ஒரு தலைவர் நாட்டிலே உண்டு என்றால் அது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தான். கூட்டணி கட்சியினர் குறைகளை சொன்னாலும் கூட அதனையும் நிவர்த்தி செய்து அதன் பிறகு அவர்களை அழைத்து குற்றத்தின் பின்னணி, குற்றத்தின் விளக்கத்தையும் விளக்கி, அசைக்க முடியாத இரு கரங்களாக கைகோர்த்துக்கொண்டு பயணித்துக் கொண்டிருக்கிறது தி.மு.க. கூட்டணி.”
எனத் தெரிவித்துள்ளார்.