சென்னை

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விரவில் துணை முதல்வர் பதவி குறித்து முடிவ் செய்வார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இன்று ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மன் கோவில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிக சுற்றுலா செல்லும் திட்டத்தை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். பிறகு அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார்,

அப்போது அமைச்சர் சேகர்பாபு.

”விரைவில் அறுபடை வீடுகள் பயணம் தொடங்க உள்ளத். மேலும் அனைத்துலக முருக பக்தர்கள் மாநாடு வரும் மாதம் 24 மற்றும் 25-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

நான் கட்சியின் அடிப்படை தொண்டர்களில் ஒருவன். நாங்கள் முதல்வர்ர் சொல்வதை நாங்கள் செயல்படுத்துவோம்.

முதல்வர் மு க ஸ்டாலின் துணை முதல்வர் பதவி உள்ளிட்ட பெரிய விஷயங்கள் பற்றி எல்லாம் முடிவு செய்வார்”

என்று தெரிவித்துள்ளார்.