கோவை

மிழக அரசு ரேஷன் பொருட்கள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு கண்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு பயனாளர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.

அப்போது அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம்,

”கோவையில் 1,542 ரேஷன் கடைகள் இருக்கிறது. 11 லட்சத்து 42 ஆயிரம் குடும்ப அட்டைகள் மூலம் சுமார் 34 லட்சம் மக்கள் பயனடைகிறார்கள். 6,000 பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதல் கட்டமாக தற்போது 750 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு துறைகளிலும் நடைபெறும் பணிகள் குறித்தும் மக்கள் நலன் குறித்தும் முதல்-அமைச்சர் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். நியாயவிலை கடைகளில் பொருட்கள் வழங்கல் பணிகளில் தொய்வு காணப்பட்டது உண்மை. ஆனால் தற்போது 90 சதவீதம் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.”

என்று தெரிவித்துள்ளார்.