மதுரை: திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி மதுரை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது திமுகவினரிடையே பரபரப்பை எற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான ஊரகம் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல்லில் உள்ள வீட்டில் இருந்து வருகிறார். அப்போது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு (வயிற்று வலி) ஏற்பட்டதால், அவரது குடும்பத்தினர், உடனே அவரை மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மதுரை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதித்தன்ர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், மேலும் சில பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும், அவை முடிந்தவுடன் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் பெரியசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது