மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளாவின் மகன் செய்ன் நாதெள்ளா இன்று மரணமடைந்தார்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சத்யா நாதெள்ளா மற்றும் அவரது மனைவி அனு-வின் மகன் செய்ன் நாதெள்ளாவின் மறைவு குறித்து குறிப்பிட்டுள்ளது.

 

26 வயதாகும் செய்ன் நாதெள்ளா பிறந்தது முதல் மூளை வாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

2014 ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனமத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றது முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் மென்பொருட்டுகளை வடிவமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார் சத்யா நாதெள்ளா.

இதுகுறித்து 2017 ம் ஆண்டு இணையதளம் ஒன்றில் பதிவிட்ட சத்யா நாதெள்ளா தான் இந்த நிலைக்கு உயர தனது மகனும் ஒரு காரணம், “சிறப்புத் தேவைகள் கொண்ட ஒரு மகனின் தந்தையாக மாறியது எனது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது, அது இன்று நான் யார் என்பதை வடிவமைத்துள்ளது. மாற்றுத்திறனாளிகளின் பயணத்தை நன்கு புரிந்துகொள்ள இது எனக்கு உதவியது.” என்று குறிப்பிட்டிருந்தார்.