மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக,  காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்,  மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளால், அணையின் நீர்மட்டம் 50அடி தாண்டி உள்ளது. தற்போது, நீர் வரத்துமு  வினாடிக்கு 23,989 கன அடியாக  உள்ளது.

கர்நாடகாவில் ள்ள   காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி  போன்ற அணைகள் நிரம்பி வருகிறது.  அணையின் பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மேட்டூருக்கு வரும் நீர் வரத்தும் அதிகரித்து ள்ளது.

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது. நேற்று ( ஜுலை 17ந்தேதி) விநாடிக்கு  16,577 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்ட  நிலையில்,   இன்று வியாழக்கிழமை (ஜூலை 18)  காலை நிலவரப்படி, வினாடிக்கு 23,989 கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை 46.80அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 50.03 அடியாக உயர்ந்துள்ளது.

அதேவேளையில்,  அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 17.83 டி எம் சி யாக உள்ளது.

காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மூன்றாவது நாளாக அடிப்பாலாறு, செட்டிபட்டி, கோட்டையூர், பண்ணவாடி, பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. அதேபோல் செட்டிபட்டி கோட்டையூர் பண்ணவாடி பரிசல் துறைகளில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் தருமபுரி மாவட்டம் நெருப்பூர் நாகமரை ஒட்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சேலம் மாவட்டம் மேட்டூர் கொளத்தூர் பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவியரும் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளும் பணிக்கு செல்வோரும் காவிரியை கடந்து செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.