தஞ்சாவூர்: மதிமுக துணைப் பொதுச்செயலாளர் துரை பாலகிருஷ்ணன் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் துரை பாலகிருஷ்ணன் (வயது 83) இவர் மதிமுக கட்சியின் துணைப்பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். கடந்த சில நாட்களாக நோய் பாதிப்பு காரணமாக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா உறுதியானது. இதையடுத்து அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Patrikai.com official YouTube Channel