சாக்ரி தாத்ரி
அரியானா மாநிலத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் மனு பாக்கரின் பாட்டி மற்றும் மாமா மரணம் அடைந்துள்ளனர்.
பாரிஸ் நகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டீல் அரியானா மாநிலத்தை சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர்2 பதக்கங்களை வென்றார். நேற்று முன்தினம் மனு பாக்கருக்கு இந்திய அரசு ‘கேல் ரத்னா’ விருது வழங்கி கவுரவித்தது.
நேற்றி மனு பாக்கரின் மாமா யுத்வீர் சிங் மற்றும் அவரது பாட்டி சாவித்திரி தேவி ஆகியோர் அரியானாவின் சாக்ரி தாத்ரி பகுதி அருகே மகேந்திரநகர் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கடும் பனிப்பொழிவு நிலவியது.
எனவே அவர்கள் சென்ற இருசக்கர வாகனம், ஒரு கார் மீது மோதியதில் கார் தலைக்குப்புற கவிழ்ந்த நிலையில், கார் ஓட்டுநர் தப்பியோடினார். விபத்தில் மனு பாக்கரின் மாமா மற்றும் பாட்டி உயிரிழந்தனர். காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.