புனே :

காராஷ்டிர மாநிலம் மாண்டெட் மாவட்டத்தில் உள்ள ஷெல்கான் என்ற கிராமத்தை சேர்ந்த அவினாஷும், சவித்ராவும் காதலர்கள் ஆவர்.

புனேயில் இருவரும் ஒரே வீட்டில் தங்கி இருந்து கணவன் –மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு தீபாவளி பண்டிகையை கொண்டாட இருவரும் மோட்டார் சைக்கிளில், புனேயில் இருந்து ஷெல்கான் புறப்பட்டனர்.

சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு ஆள் அரவமற்ற மலைப்பாதையில் சென்றபோது அவினாஷ், “பைக்கை” நிறுத்தியுள்ளான்.

கழுத்தை நெரித்து சவித்ராவை கொல்ல முயன்றுள்ளான். அவர் கடுமையாக எதிர்த்து போராடியதால், தான் கையோடு கொண்டு சென்ற திராவக பாட்டிலை திறந்து காதலி சவித்ரா மீது ஊற்றினான், அவினாஷ்.

உடலில் திராவகம் வீசப்பட்டதால் அவர், அலறி துடித்தார். ஆத்திரம் அடங்காத அவினாஷ், வெறி பிடித்தவன் போல், மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை எடுத்து, சவித்ரா மீது ஊற்றி தீ வைத்துள்ளான்.

உடல் பற்றி எரிந்த நிலையில், சவித்ராவை சாலை ஓரமாக இருந்த சாக்கடையில் தூக்கி வீசி விட்டு தப்பி சென்று விட்டான், கொடூர காதலன், அவினாஷ். திராவகமும், பெட்ரோலும் சவித்ராவின் உடம்பை கொஞ்சம் கொஞ்சமாக தின்று கொண்டிருக்க அவர் விடிய விடிய கதறி உள்ளார்.

அந்த பகுதி ‘ரிமோட் ஏரியா’ என்பதால் இவரது அலறல் யார் காதிலும் கேட்கவில்லை.

சனிக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் அந்த வழியாக வந்த ஆடு மேய்க்கும் சிறுவன், சவித்ரா அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்துள்ளார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். ‘பீட்’ நகர போலீசார், விரைந்து வந்து 12 மணி நேரம் சாக்கடையில் தீக்காயங்களுடன் துடித்த சவித்ராவை மீட்டு, பீட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

உடல் முழுவதும் வெந்த நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 16 மணி நேரம் போராடியும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. நேற்று காலையில் சவித்ரா இறந்து போனார்.

காதலியை எதற்காக, அந்த குரூரன் கொலை செய்தான் என்பது தெரியவில்லை.

சவித்ராவின் பெற்றோர், அந்த மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு, தப்பி ஓடிய அவினாஷை தேடி வருகிறார்கள்.

22 வயதே ஆன சவித்ராவின் கோரக்கொலை மகாராஷ்டிராவில், அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

– பா. பாரதி