பமாகோ: மாலி நாட்டில்  ரிசார்ட் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருவர் பேர் பலியானார்கள்.

மாலி நாட்டின் தலைநகரான பமாகோ அருகே உள்ள பிரபல ரிசார்ட் ஒன்றில் துப்பாக்கிகளுடன் பயங்கரவாதிகள் திடீரென புகுந்து தாக்குதல் நடத்தினார்கள்.

இந்தத்  தாக்குதலில் பொதுமக்களில் இருவர் பலியானார்கள். தாக்குதல் நடந்த சிறிது நேரத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக நுழைந்து 32 பேரை மீட்டனர். சிலர் குண்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்பு கடந்த 2015ம் ஆண்டு நவம்பர்  மாதம் மாலியில் உள்ள ஓட்டல் ஒன்றில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 22 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது