ஸ்பெயின், போர்ச்சுகலில் திங்களன்று பரவலான மின் தடை ஏற்பட்டதால், மில்லியன் கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்தனர். இந்த மின் தடையைத் தொடர்ந்து பிரான்சின் சில பகுதிகள் தற்காலிகமாக மின்சாரத்தை இழந்ததாக பிரெஞ்சு கிரிட் ஆபரேட்டர் RTE தெரிவித்துள்ளது.

இந்த மின் தடை காரணமாக மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆட்டம் நிறுத்தப்பட்டபோது பிரிட்டிஷ் டென்னிஸ் வீரர் ஜேக்கப் ஃபியர்ன்லி மைதானத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று பிபிசி தெரிவித்துள்ளது.

லிப்சனில், கார்டு பரிவர்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படாததை அடுத்து, பணம் செலுத்தும் கவுண்டர்களின் குடிமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், பலேரிக் மற்றும் கேனரி தீவுகள் பாதிக்கப்படவில்லை என்று தெரிகிறது. போக்குவரத்து சிக்னல்கள் வேலை செய்யாததால் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டின் மையத்தில் போக்குவரத்து நெரிசல்கள் இருப்பதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெட்ரோ ரயில் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.