8,848.86 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏற நேபாள சுற்றுலாத் துறை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த முறை, 53 நாடுகளைச் சேர்ந்த 74 பெண்கள் உட்பட 402 மலையேறுபவர்களுக்கு எவரெஸ்ட் சிகரத்தில் ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், 75 பெண்கள் மற்றும் 330 ஆண்கள் உட்பட 414 பேர் சிகரத்தில் ஏற அனுமதிக்கப்பட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நேபாளத்தில் பல்வேறு சிகரங்களை ஏற வழங்கப்பட்ட அனுமதிகளிலிருந்து மொத்தம் ₹68.4 கோடி பர்மிட் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. எவரெஸ்ட் சிகரத்தை ஏறுவதற்காக மட்டும் ₹59.5 கோடி பர்மிட் கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 8,000 மலையேறுபவர்கள் இதுவரை எவரெஸ்ட் சிகரத்தை ஏற முயற்சித்துள்ளதாக அந்தத் துறை தெரிவித்துள்ளது.