மும்பை
மும்பை அமலாகத்துறை அலுவலகத்தில் ஏற்பட்டபயங்கர தீ விபத்து கடும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
மகாரஷ்ட்ர மாநிலத்தின் தலைநகர் மும்பையின் உள்ள பலர்ட் பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் அமைந்துள்ளது. இந்த 5 அடுக்குமாடிகளை கொண்ட இந்த கட்டிடத்தில் அமலாக்கத்துறையின் மும்பை அலுவலகம் உள்ளது.
இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில், இந்த அடுக்குமாடி கட்டிடத்தின் 4வது தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுதீ கிடுகிடுவென கட்டிடத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியது.
தகவலறிந்த தீயணைப்புப்படையினர் பற்றி எரிந்து வரும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.