பிரயாக் ராஜ்
நேற்றுடன் நிறைவடந்த மகாகும்பமேளால் 65 கோடி பேர் புனித நீராடியதாக u பி மாநில அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி.13 ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் தொடங்கிய மகா கும்பமேளா கடந்த 44 நாட்களாக நடைபெற்று நேற்றைய மஹா சிவராத்தியுடன் நிறைவடைந்தது.
மகா கும்பமேளாவுக்காக 7500 கோடி ரூபாய் செலவில் 4,000 ஹெக்டேர் பரப்பில் மகா கும்ப நகர் தயார் செய்யப்பட்டு 1.6 லட்சம் தங்கும் கூடாரங்கள், 1.5 லட்சம் கழிப்பறைகள், 30 மிதக்கும் பாலங்கள், 12 கி.மீ. தூரத்திற்கு புனித நீராடும் படித்துறைகள் கட்டப்பட்டன.
மொட்தம் 45 கோடி பக்தர்கள் இந்த மகா கும்பமேளாவில் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 65 கோடி பேர் புனித நீராடியதாக உத்தரப்பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel