பிரக்யாராஜ்: உ.பி. மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பல கோடி பேர் கலந்துகொண்டு வரும் நிலையில், அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் இதுவரை 46.25 கோடி பக்கதர்கள் புனித நீராடி உள்ளனர் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் மகா கும்பமேளா உ.பி. மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த மாதம் (ஜனவரி 2025) 13ஆம் தேதி தொடங்கியது. சுமார் 45 நாட்கள் நடைபெறும் இந்த மகா கும்பமேளா வரும் பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த கும்பமேளாவையொட்டி, உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நிகழ்வு 2025ம் ஆண்டு ஜன.12-ம் தேதி தொடங்கி வருகிற பிப். 26-ம் தேதி வரை என 45 நாட்கள் நடைபெறுகிறது.
கும்பமேளா நடைபெறும் காலங்களில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை பலரும் புனிதமாக கருதுகின்றனர். அதன் காரணமாக, உலகம் முழுவதும் இருந்து வந்து பொதுமக்கள், சந்நியாசிகள், துறவிகள், சாதுக்கள், சாத்விகள், கல்பவாசிகள், யாத்ரீகர்களை உட்பட பலர் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் நீராடி வருகின்றனர். மகா கும்பமேளாவை முன்னிட்டு சமீபத்தில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, மற்றும் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உள்ளிட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். தொடர்ந்து மக்கள் அலை அலையாக பிரக்யாராஜ் நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்த நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
மகா கும்பமேளா முடிய இன்னும் 13 நாட்களே உள்ள நலையில், இதுவரை 46.25 மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரிவேணி சங்கமத்தில் நீராட, கடந்த சில நாள்களாக, பல்வேறு மாநிலங்களில் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜுக்கு வந்து கொண்டே இருப்பதால், பல நெடுஞ்சாலைகளில் நூற்றுக்கணக்கான கி.மீ க்கு போக்குவரத்து நெரிசல் நீண்டது. மத்தியப் பிரதேச நெடுஞ்சாலையில் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த முறை நடைபெற்ற மகா கும்பமேளாவில் 35 கோடி மக்கள் புனித நீராடிய நிலையில், இந்த முறை 50 கோடிபேர் வரை புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதை தாண்டி 60 கோடி பேர் வரை புனித நீராட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.