மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவின் மத்தியப் பகுதியில், 6.4 ரிக்டார் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் நிலவியல் சர்வே அமைப்பு வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளதாவது; தலைநகர் மணிலாவின் முக்கிய வணிகப் பகுதியிலுள்ள அலுவலக கட்டடங்கள் குலுங்கின.

மணிலாவிற்கு 60 கி.மீ. தொலைவில், 40 கி.மீ. ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம், முதலில் 6.4 என்ற ரிக்டர் அளவில் இருந்து, பின்னர் சிறிதுசிறிதாக வலிமை குன்றிவிட்டது.

ஆனால், இந்தப் பூகம்பத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் மற்றும் காயமடைந்தவர்களின் விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இப்பூகம்பத்தால், மணிலாவில் தங்களின் அலுவலகங்களை சிலர் காலிசெய்துவிட்டனர்.

– மதுரை மாயாண்டி