இளங்காளியம்மன் திருக்கோயில், முள்ளிப்பள்ளம், சோ ழவந்தான்,மதுரை.

தல சிறப்பு :

இங்குள்ள அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறாள்.

பொது தகவல் :

இக்கோயிலில் முன் ராஜகோபுர அமைந்துள்ளது. உட்பிரகாரத்தில் அங்காள பரமேஸ்வரியம்மன், குருநாதசுவாமி, இருளப்பசுவாமி, வீரபத்திரசுவாமி, வலதுபுறம் கருப்பணசுவாமி, பேச்சியம்மன், ராக்காயி, இருளாயி ஆகியோர் தனித்தனி சன்னதிகள் உண்டு, விநாயகர் முருகன் அர்த்தமண்டபம் முன் குடிகொண்டுள்ளனர்.

பிரார்த்தனை :

திருமணம், குழந்தைவரம், தொழில் விருத்தியடைய, விவசாயம் செழிக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன் :

அம்மனுக்கு பச்சை, சிவப்பு சேலை சார்த்தியும், அக்கினிச்சட்டி எடுத்தல், தொட்டில் கட்டுதல், விளக்குபூஜை, கரும்பு தொட்டில், பால்குடம் போன்ற அனைத்துவிதமான நேர்த்திக்கடனையும் செலுத்துகிறார்கள்.

தலபெருமை :

இளங்காளியம்மன் சக்தி வாய்ந்த தெய்வம்.

தல வரலாறு :

600 ஆண்டுக்கு முன் சுயம்புவாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். புராதன சிறப்பு மிக்க இக்கோயிலை இப்பகுதி விவசாயிகள் விரிவாக கட்டி தொடர்ந்து விழாக்கள் எடுத்து அருள்பெற்று வருகின்றனர்.

திருவிழா :

ஆண்டுதோறும் ஆனியில் ஏழு நாட்கள் திருவிழா, ஒவ்வொரு தமிழ் மாதம் செவ்வாய் அன்று விளக்கு பூஜை, பவுர்ணமி பூஜை, மார்கழி பூஜை. நவராத்திரி, கோகுலாஷ்டமி உற்சவங்கள்.

சி