தமிழ்நாடு அரசு மேற்கொள்ள இருக்கும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மக்களுக்கு அருகிலேயே சிறப்பு மருத்துவ சேவைகளை கொண்டு செல்லும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அரசு திட்டத்தில் முதலமைச்சரின் பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அரசு திட்டங்களில் முதலமைச்சரின் பெயரைப் பயன்படுத்தலாம் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கமளித்ததை ஏற்று இந்த திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.