சென்னை:
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்தமான் கடல் பகுதியில் வரும் 18-ஆம் தேதி உருவாகும் மேலடுக்கு சுழற்சி, அக்டோபர் 20-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மிக கனமழையும், கர்நாடகாவில் சில இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel