சென்னை
தற்போது வங்கக் கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த பகுதி வலுவடைந்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”தற்போது வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
ஏற்கனவே வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில நிலவி வரும் மோசமான வானிலை மேலும் அதிகரிக்கும். தமிழகத்தில் அடுத்த 7 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளது”
என்று தெரிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel