தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோரும் தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் திருவிழா நடைபெறும்.

எப்போதும் இந்த திருவிழாவையொட்டி, உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். அவ்வ்கையில், பனிமய மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 5-ந்தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்பதால் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஆகஸ்ட் 10 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என தூத்துக்குடி ஆட்சியர் அறிவித்துள்ளார்.