லாஸ்வேகாஸ்
லாஸ்வேகாஸ் நகரில் நடந்த துப்பாக்கி சூடு பற்றிய புதுத் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

லாஸ் வேகாஸ் நகரில் உள்ள மண்டாலே பே ஓட்டலில் காசினோ, மற்றும் அரங்குகள் உள்ளது.  அந்த அரங்கில் ஒரு இசை நிகழ்ச்சி நடை பெற்று வந்துள்ளது.   அப்போது அந்த ஓட்டலின் 32 ஆவது மாடியில் இருந்து துப்பாக்கி சூடு நடை பெற்றுள்ளது.   முதலில் ஒரு கும்பல் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதாக வந்த தகவலை போலீஸ் அதிகாரி மறுத்துள்ளார்.  ஒரே ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாகவும் அவரை போலிசார் துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இருவதுக்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளதாகவும் சுமார் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.   துப்பாக்கியால் சுட்டவர் பெயர் மற்றும் அடையாளத்தை அதிகாரி கூறவில்லை.  மேலும் அவருடன் பல கூட்டாளிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.    துப்பாக்கியால் சுட்டவர் என ஒரு புகைப்படம் (மேலே உள்ளது) வெளியாகி உள்ளது.   வேறு சிலர் அது சுட்டவரின் படம் அல்ல போலீசின் படம் என தெரிவிக்கின்றனர்