கொரோனா தொற்று வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் கடநத மார்ச் மாதம் 24ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தடை உத்தரவை மீறுபவர்களை காவல் துறை தடுத்து, நடவடிக்கை எடுத்து வருகிறது. உத்தரவை மீறிய இளைஞர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அவர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர்.
ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்து 106 நாள்களான நிலையில், காவல் துறை இதுவரை தடையை மீறியதாக 8 லட்சத்து 23 ஆயிரத்து 488 பேரை கைது செய்து பிணையில் விடுவிக்கப்பட்ட உள்ளனர்.
இதுவரை 6 லட்சத்து 24 ஆயிரத்து 720 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை அபராதமாக 17 கோடியே 37 லட்சத்து 57 ஆயிரத்து 276 ரூபாய் வசூல் செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.