சென்னை:  தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக வாகன ஓட்டிகளிடம்  இருந்து வசூலிக்கப்பட்டுள்ள அபராத தொகை ரூ.21.44 கோடியாகும் என தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுடன் ஆகஸ்டு இறுதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.  இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவை  மீறி வெளியே செல்பவர்களை காவல்துறையினர் மடக்கி  வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலித்து வருகின்றனர்.

அதன்படி,

இதுவரை (24ந்தேதி வரை) அபராதமாக  ரூ.21.44 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 9,90,574 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

இதுவரை 6,92,957 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இதுவரை 8,95,680 வழக்குகள் பதிவாகி உள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 460 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  1,801 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.  1,401 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் ரூ.11,08,600 அபராதம் வசூலிக்கப்பட்டுது.

இவ்வாறு காவல்துறை தெரிவித்து உள்ளது.