சென்னை:

மிழகத்தில்  இன்று (18/06/2020) காலை நிலவரப்படி ஊரடங்கை மீறிச்சென்ற வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதமாக ரூ.13.38 கோடி வசூலாகி இருப்பதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 5  கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு ஜூன் 30ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஊரடங்கை மீறிய வாகன ஓட்டிகளை மடக்கும் காவல்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அபராதம் வசூலித்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,  இன்று (18ந்தேதி) காலை 6 மணி நிலவரப்படி,

ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,57,399 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

இதுவரை 4,78,714 வாகனங்கள் பறிமுதல்; 6,08,791 வழக்குகள் பதிவாகி உள்னனர்.

ஊரடங்கிய மீறிவர்களிடம் இருந்து  இதுவரை ரூ.13.38 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.