தென்காசி

வரும் 25 ஆம் தேதி அன்று திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

வரும் 25 ஆம் தேதி திங்கடகிழமை  பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்படுகிறது.  ஏற்கவே திருநெல்வேலி மாவட்டத்தில் 25 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

தற்போது, பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

25ம் தேதி அரசு பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் , உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.