கமதாபாத்

குஜராத் மாநிலத்தில் 20 நகரங்களிலும், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் கொரோனா பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் மிகவும் அதிகரித்து வருகிறது.  தினசரி பாதிப்பு 1 லட்சத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது.   இதையொட்டி மகாராஷ்டிரா, டில்லி ஆகிய மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில் குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி குஜராத் மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளார்.

இதன்படி இந்த மாதம் 30 ஆம் தேதி வரை இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது.  மேலும் அனைத்து அரசு அலுவலகங்களும் 30 ஆம் தேதி வரை மூடப்பட உள்ளன.  கூடியவரைத் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களை ஒத்தி வைக்க வேண்டும் எனவும் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதைப் போல் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது.  மேலும் பல புதிய கட்டுப்பாடுகளும் அம்மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ளன.

அவை பின் வருமாறு

  • திருமண விழாக்களில் அதிகபட்சம் 200 பேருக்கு மட்டுமே அனுமதி.
  • இறுதிச் சடங்குகள் தொடர்புடைய நிகழ்ச்சிகளில் 50 பேர் கலந்து கொள்ள அனுமதி.
  • மத ஊர்வலங்கள் உள்பட அனைத்து ஊர்வலங்களுக்கும் தடை
  • உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், அனைத்து பூங்காக்களும் மூடப்பட வேண்டும்.
  • இரவு 8 மணிக்குப் பின்னர் அனைத்து கடைகள், உணவு விடுதிகள் மற்றும் கிளப்புகள் திறந்திருக்க அனுமதி கிடையாது.
  • எனினும், உணவு பொருட்களை வீட்டுக்கு எடுத்து செல்வதும் மற்றும் வீட்டுக்கு சென்று விநியோகம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுவதாக அரசு வெளியிட்ட வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.