சென்னை: தலைவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். அவர் அண்ணாமலை குறித்து மறைமுகமாக பேசியிருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுக பாஜக இடையேயான வார்த்தை போர் உச்சத்தை தொட்டுள்ளது. இதன் எதிரொலி நேற்று நடைபெற்ற பாஜக கூட்டத்தில் எதிரொலித்தது. அதில் பேசிய அண்ணாமலை, எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அவர் ஒரு தற்குறி என்றும் கூவத்தூரில் ஊர்ந்து போய் முதலமைச்சர் பதவியை பிடித்தவர் என்றும் கடுமையாக சாடியிருந்தார்.

இது அதிமுகவினரிடையே கொந்தளிப்பை எற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த  முன்னாள் மாநில பாஜக தலைவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை,  தலைவர்களுக்கு கொடுக்க வேண்டிய உரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என அண்ணாமலைக்கு தமிழிசை சவுந்தரராஜன் அறிவுரை வழங்கியுள்ளார்.

மாநிலத் தலைவருக்கு கருத்து சொல்ல உரிமை உள்ளது; ஆனால்  மற்ற கட்சி தலைவர்கள் குறித்த கடும் சொற்கள் கூடாது என்றும் தெரிவித்தார்.