மும்பை 

டந்த 1993 ஆம் ஆண்டு மும்பையில்  நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி அப்துல் கரீம் துண்டா விடுதலை செய்யப்பட்டுள்ளார்/ 

கடந்த 1993-ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு நாட்டையே  அதிரச் செய்தது  இத வழக்கில் தொடர்புடைய அப்துல் கரிம் துண்டாவை கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் நேபாள எல்லையான பன்பாஸாவில் ஃபில்லி காவல்துறையினர் கைது செய்தனர்.

இன்று தடா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த துண்டாவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி தடா நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

ஆனால், அவருடன் குற்றம்சாட்டப்பட்ட இர்பான் (70), ஹமீதுதீன் (44) ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.