பெய்ஜிங்:

சீனாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சிச்சுவான் என்ற மலை பிரதேச மாகாணத்தில் லியாங்ஷான் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 23 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலச் சரிவினால் அந்த பகுதியில் 71 வீடுகள் இடிந்துள்ளது. 2 பேர் மாயமாகியுள்ளனர். நிலச்சரிவில் இருந்து ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் சிச்சுவான் மாகாணத்தின் மற்றொரு பகுதியில் ஏற்பட்ட நில சரிவில் 10 பேர் இறந்தனர். இதில் மாயமான 70 பேரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.