ராஞ்சி

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் உடல்நலக் குறைவு காரணமாக ராஞ்சி மருத்துவம்னையில் இருந்து டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

மாட்டுத் தீவண ஊழல் வழக்கில் பிகார் மாநில முன்னாள்  முதல்வர் லாலுபிரசாத் யாதவ் கடந்த வருடம் டிசம்பர் 23 ஆம் தேதி தண்டனை பெற்று ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் ராஞ்சி மருத்துவமனையில் சிறை அதிகாரிகள் அனுமதித்தனர்.   அங்கு அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிரது.

தற்போது எட்டு மருத்துவர்கள் கொண்ட குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது.   அவர் உடல்நிலை சீரடையாததால் அவரை டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்து அங்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் குழு ஆலோசித்து வருகிறது.   இது குறித்து இன்று மாலைக்குள் முடிவு எடுக்கப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.