ஐபிஎல் 2024 தொடரின் இறுதிப் போட்டி சென்னையில் நேற்று நடைபெற்றது.

கோப்பையை வெல்ல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே நடைபெற்ற இந்த போட்டியில் ஆரம்பம் முதலே கொல்கத்தா அணி ஆதிக்கம் செலுத்தியது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ரசிகர்கள் ஒரு கட்டத்தில் பையை தூக்கிக் கொண்டு கிளம்ப தயாரானார்கள் என்றபோதும் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் தனது அணியின் வீரர்கள் மீது மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார்.

ஆனால் அவரது கனவு நிறைவேறவில்லை என்ற போதும் தனது அணி வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தியதாக அவர்களிடையே பேசும் போது தெரிவித்தார்.

இதுகுறித்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் எக்ஸ் பக்கத்தில் வெளியாகி உள்ள பதிவில், “கடந்த ஆண்டு நாம் கடைசி இடத்தை பிடித்திருந்த போதும் உங்கள் திறமை காரணமாக இம்முறை அதிகளவு ரசிகர்கள் கவர்ந்துள்ளீர்கள்.

இந்த தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்ற போதும் அனைவரும் நம்மைப் பற்றியே பேசுகின்றனர். டி20 கிரிக்கெட் விளையாடும் விதத்தை நீங்கள் மறுவரையறை செய்துவிட்டீர்கள்” என்று காவ்யா மாறன் கூறியுள்ளார்.