டிரினிடாடியன்:
மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கீரோன் பொல்லார்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வினை அறிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிரடி ஆல்ரவுண்டராக விளங்கி வருபவர் கீரோன் பொல்லார்டுக்கு தற்போது 34 வயதாகிறது. இந்நிலையில், 15 வருடங்களாக கிரிக்கெட் வாழ்க்கையில் அங்கம் வகித்து வரும் அவர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் ஓய்வு பெறுகிறேன். இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் முன்னேற விரும்புவர்களுக்கு என்னால் முடிந்த அனைத்து வகையிலும் எப்போதும் ஆதரவளிப்பேன் என்றும்,  மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் நிர்வாகம் எனது கனவை நனவாக்கியதற்கு மனமார்ந்த நன்றி” இவ்வாறு கூறியுள்ளார்.