திருவனந்தபுரம்

பிரதமர் மோடி கண்ணுக்கு தேரியாத வாக்காளர்களைக் கண்டு பயப்படுவதாக மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார்,

நாளை மறுநாள் அதாவது 26 ஆம் தேதி அன்று கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைய உள்ளது. இங்கு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.

கேரளாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளரிடம்ம்

”பிரதமர் மோடி கிட்டத்தட்ட 10-12 மாநிலங்களுக்குப் பயணம் செய்ததாகவும், அங்குள்ள வாக்காளர்களிடமிருந்து கட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும் கூறுகிறார். பிரதமர் மோடி கண்ணுக்குத் தெரியாத வாக்காளர்களைக் கண்டு பயப்படுவதால்தான் எப்போதும் காங்கிரசை விமர்சித்து வருகிறார்.

அவர் காங்கிரஸ் என்ற கட்சியே இல்லை என கூறி வரும் போது எதற்காக எங்கள் கட்சியைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்? பாஜகவுக்கு வெற்றிப்பெறுவோம் என பா.ஜனதாவுக்கு அதிக நம்பிக்கை இருந்தால், எதற்காக ஊழல்வாதிகளைக் கட்சியில் சேர்க்கிறீர்கள்? ஆனால் அவர்கள் காங்கிரசிலோ அல்லது வேறு ஏதாவது கட்சியிலோ இருந்தால் அவர்களை பெரிய ஊழல்வாதிகள் எனக் கூறுவீர்கள்.

மோடி, நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.15 லட்சம் தருவதாக கூறினார். அதாவது காங்கிரஸ் கட்சியினர் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை மீட்டு கொண்டுவருவேன் என்றார். அந்த பணமெல்லாம் எங்கே?

அடுத்த தேர்தலில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாகக் கூறினாரே, விவசாயிகளின் இரட்டிப்பு வருமானம் எங்கே? அவர் தற்போது மோடியின் கியாரண்டி எனப் பேசி வருகிறார். வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டோம் என்பதே மோடியின் கியாரண்டி . மோடி வாக்குகளுக்காக இந்த விளையாட்டுகளை எல்லாம் விளையாடுகிறார்”

என்று கூறியுள்ளார்.