டில்லி

த்திய அமைப்புக்களைத் தவறாகப் பயன்படுத்தி பாஜக ரூ.400 கோடி நன்கொடை திரட்டி உள்ளது என மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் கார்கே தனது எக்ஸ் வலைத்தளத்தில்,

”பாஜக சட்டவிரோதமான தேர்தல் பத்திரங்களைப் பயன்படுத்தி, தனது கொள்ளை கஜானாவை பா.ஜனதா நிரப்பி வருகிறது. 

மத்திய அமைப்புக்களான சி.பி.ஐ., வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றின் சோதனையை எதிர்கொண்ட 30 நிறுவனங்கள் பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் மொத்தம் ரூ.335 கோடி நன்கொடை கொடுத்தது ஏற்கனவே தெரிய வந்தது. 

மேலும் 15 நிறுவனங்களில் மத்திய விசாரணை அமைப்புகளைச் சோதனைக்கு அனுப்பி, பாஜக நன்கொடை பெற்றிருப்பது ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது. இவற்றில் 4 போலி நிறுவனங்களும் அடங்கும். இந்த 45 நிறுவனங்களிலும் சேர்த்து பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் மொத்தம் ரூ.400 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகளைச் சர்வாதிகார மோடி அரசு முடக்கி வைத்துள்ளது.  அதே வேளையில் மத்திய விசாரணை அமைப்புகளைத் தவறாக பயன்படுத்தி, பணம் பறித்துள்ளது. இது, அதிக நன்கொடை பெறுவதற்கான பிளாக்மெயிலா? பணம் பறிப்பா? கொள்ளையா?. 

ஜனநாயக தாய் மீது பாஜகவுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், தனது சொந்த நிதி குறித்து சுதந்திரமான ஆய்வு நடத்தி, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.” 

என்று பதிவிட்டுள்ளார்.