திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 6,419 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது, உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்ட உள்ளதாவது: இன்று புதியதாக 6,419 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 5,39,920 ஆக உயர்ந்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1,943 ஆக உள்ளது. இன்று மட்டும் 7,066 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்னர். இன்னமும் 69,394 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று கூறப்பட்டு உள்ளது.
Patrikai.com official YouTube Channel