இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், சோனி தொலைக்காட்சியில் ‘கான் பனேகா குரோர்பதி’ எனும் கோடீஸ்வர நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதன் 12 வது அத்தியாயம் இப்போது ஒளிபரப்பாகி வருகிறது.

அண்மையில் டெல்லியை சேர்ந்த நசியா நசீம் என்ற தனியார் நிறுவன அலுவலர் ஒரு கோடி ரூபாய் பரிசை தட்டிச்சென்றார். இந்த சீசனில் ஒரு கோடி ரூபாய் பரிசை முதலில் பெற்றவர், இவர் தான்.

தற்போது ஐ.பி.எஸ்.அதிகாரி மோகிதா சர்மா, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அனைத்து வினாக்களுக்கும் சரியான பதில் அளித்ததால், அவரும் ஒரு கோடி ரூபாய் பரிசை தட்டிச்சென்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சி வரும் 17 ஆம் தேதி சோனி தொலைக்காட்சியில் ஒளி பரப்பாகிறது.

– பா. பாரதி